அண்ணா பல்கலை இணையவழி தேர்வு – பொறியியல் கல்லூரிகள் அதிருப்தி!!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் அதிருப்தியை உருவாகியுள்ளதாகவும், தேர்வு முடிவுகள் குறித்து பல்கலைக்கழகம் சரியான விளக்கம் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
கொரோனா பரவல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட இந்த தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழத்தின் இரண்டாம், மூன்றாம் & நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சுமார் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இணையதளத்தில் வெளியானது.
TN Job “FB Group” Join Now
அதில் 70 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்ததாகவும், 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் (with held) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் காரணமாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தாஜ்மஹால் உட்பட புராதான நினைவுச் சின்னங்கள் மே 15 வரை அடைப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
இந்த தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவிக்கையில், ‘தேர்வுகளின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட மாணவர்களை எச்சரித்திருக்கலாம். அதே போல தேர்வு முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து மாணவர்களின் முறைகேடு குறித்து பேசுவது நியாயமில்லை’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இணையவழி தேர்வு முறையில் ஏற்பட்ட குழப்பங்களை கருத்தில் கொண்டு மறுமதிப்பீடு செய்ய பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது. முறைகேடு குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவிர கல்லூரி தரப்பிலிருந்து தரும் விளக்கங்கள் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடாத மாணவர்கள் பயப்பட தேவையில்லை’ என தெரிவித்துள்ளனர்.