சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை தடாலடியாக குறைவு – இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று (ஜூலை 7) காலை துவங்கி இருக்கும் ஆபரணத்தங்க நகைகளின் விற்பனையில் ஒரு சவரனுக்கு ரூ.544 தடாலடியாக குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
இன்றைய விற்பனை
இந்தியாவில் கொரோனா தொற்று நெருக்கடி மற்றும் பணவீக்க பாதிப்புகள் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்த ஆபரணத்தங்க நகைகளின் விலை இன்றைய விற்பனையில் அதிரடியாக குறைந்திருக்கிறது. அதாவது, இந்த மாத துவக்கத்தில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து வந்த ஆபரணத்தங்க நகைகளின் விலையால் சுப காரியங்களுக்காக நகை வாங்க எண்ணியவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அதிலும் குறிப்பாக, தங்கத்தின் விலை காலை, மாலை என இரண்டு நேர விற்பனையிலும் ஏகப்பட்ட மாற்றங்களை கண்டது.
Exams Daily Mobile App Download
அதனால், நகை வாங்க செல்பவர்கள் விலை உயர்வு போன்ற பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். ஆனால் இன்றைய விற்பனையில் ஆபரணத்தங்க நகைகளின் விலை கடுமையான இறக்கத்தை சந்தித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 வரை குறைந்து ஒரு சவரன் நகை ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலையானது ரூ.4,672 ஆக விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை குறைவால் இன்றைய விற்பனை களைகட்டும் என்று நகை விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இதற்கிடையில், சென்னையின் தங்கத்தின் விலை 2 கடந்த நாட்களில் ரூ.1,000க்கும் மேல் குறைந்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விலை குறைவானது உலக நாடுகள் மத்தியில் நிலவும் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர, சென்னையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஆபரணத்தங்கத்தின் விலையானது அடுத்து வரும் சில நாட்களில் இன்னும் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.