தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், வண்டலூர் , செம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. மேலும் மாநிலத்தில் கோடை வெயில் மார்ச் மாத இறுதியில் தொடங்கி, மக்களை வாட்டி வதக்கியது, இருப்பினும் கடந்த ஜூன் மாதம் முதல் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
காற்றின் திசை மற்றும் வேகத்தின் மாறுபாடு காரணமாக ஜூலை 7ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.