சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.288 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை படு ஏற்ற இறக்கமாய் இருந்து வருகிறது. அதாவது, தங்கத்தின் விலை திடீரென விலை உயர்வதும், அதற்கு பிறகு விலை குறைவதுமாய் இருந்து வருகிறது. அதாவது, பங்குசந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கமே இந்த விலை உயர்விற்கு காரணமாகி வருகிறது. கடந்த ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை அதிரடியாய் குறைக்கப்பட்டு சவரனுக்கு ரூ. 37,000 மற்றும் கிராமிற்கு ரூ.4,600 என்கிற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால், இந்த இரண்டு நாட்களுமே அதிக அளவிலான நகைப்பிரியர்கள் நகை வாங்கினர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, எதிர்பாராத அளவிற்கு தங்கத்தின் விலை உயர ஆரம்பித்துவிட்டது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.296 குறைந்து, ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 குறைந்து ரூ.4,630க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரே நாளில் ரூ.296 அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.00க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Ford நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனையடுத்து, சென்னையில் இன்று அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36 உயர்ந்து ரூ.4,666 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.60 காசு உயர்ந்து ரூ.61.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஒரேடியாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.