சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையேற்றம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 38,280 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.56 உயர்த்தப்பட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது திடீரென விலை உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தில் முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தை கண்ணால் பார்க்க மட்டுமே முடியும், வாங்கவே முடியாத சூழல் ஏற்பட இருக்கிறது. எனவே, முடிந்த அளவிற்கு எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தாய்மார்கள் தங்களது குடும்ப வருமானத்தின் பாதியை தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் ஏற்றுமதி இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைகிறது. ஒரு சில நாட்களில் அதிரடியாய் உயர்வதும், பின்பு சட்டென்று குறைவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 38,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,785 க்கு விற்பனையானது மற்றும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.65.00 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கதிர் வீட்டுக்கு வரும் தனம் & ஜீவா – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 38,336 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 7 உயர்ந்து ரூ.4,785 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.50 குறைந்து ரூ.63.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.