கதிர் வீட்டுக்கு வரும் தனம் & ஜீவா – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர்- முல்லை இருவரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து வெளியேறி தனியாக வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர். இந்த காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியதும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். பலரும் கதிர் மற்றும் முல்லை இருவரும் மீண்டும் குடும்பத்துடன் வந்து சேர வேண்டும் என்று தொடர்ச்சியாக இணையதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ப்ரோமோ வெளியீடு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் ஆகும். என்ன நடந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்த சீரியலின் சிறப்பு அம்சம். ஆனால் தனம் பிறந்த நாள் அன்று உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கதிர்-முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். இந்த அதிர்ச்சி தாங்காமல் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அப்போது அண்ணனை பாக்க வந்த கதிரை வீட்டுக்கு தனம் அழைத்தார். ஆனால் கதிர் மறுத்துவிட்டார். இதற்கிடையில் மூர்த்திக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் உள்ளார்.
Exams Daily Mobile App Download
மறுபுறம் கதிர் மற்றும் முல்லை இருவரும் தனியே வீடு பார்த்துவிட்டனர். புது வீடு பார்த்துவிட்டு வெளியே வந்த கதிர் & முல்லை சாலையில் நடந்து வர, எதார்த்தமாக தம்முடைய அண்ணன் ஜீவா மற்றும் அண்ணி தனம் ஆகியோரை கதிர் வழியில் சந்திக்கிறார். அப்போது வீடு அமைந்தது குறித்து முல்லை தனத்திடம் தெரிவிக்க, இதனிடையே கதிரின் சாவி எதார்த்தமாக கீழே விழுந்து விடுகிறது, அவரும் சாவியை எடுப்பதற்காக கீழே குனிகிறார். ஆனால் அவர் சாவியை கீழே போடுவது போல போட்டு, அண்ணியிடம் ஆசீர்வாதம் வாங்கத்தான் கீழே குனிந்தார். அப்போது தனம் நல்லா இருங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
இதையடுத்து தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் முல்லை குடியேறி இருக்கும் புது வீட்டிற்கு, அண்ணி தனமும், அண்ணன் ஜீவாவும் வருகிறார்கள். அப்போது முல்லை அவர்களை வரவேற்கிறார். இருப்பினும் தனமும், ஜீவாவும் வெளியேவே நின்று, கதிருக்கும் முல்லைக்கும் வாங்கிட்டுவந்த துணிமணிகள் மற்றும் ஒரு சில பொருட்களை கொடுத்தனர். பின்னர் கதிர் வீட்டிற்குள் போன் பேசிக்கொண்டு இருந்தார், முல்லை கதிரை கூப்பிட வீட்டிற்குள் சென்றார்.
‘சரவணன் மீனாட்சி’ சீசன் 4 சீரியலில் என்ட்ரியாகும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி – ப்ரோமோ ரிலீஸ்!
அப்போது வீட்டில் மூர்த்தி மற்றும் தனம் போட்டோ மாட்டி இருப்பதை ஜீவா பார்த்து, உங்களோட போட்டவாதான் மாட்டிருக்காங்கங்கனு நெகிழ்வுடன் அண்ணியிடம் ஜீவா சொலிக்கிறார். அதை கேட்டு தனம் அழுகிறார். பின்னர் கதிர் வீட்டிற்கு வெளியே வருவதற்குள் ஜீவாவும், தனமும் கிளம்பிவிட்டனர். மேலும் கதிர், தனம் வாங்கி கொடுத்த பொருட்களை பார்த்து வருத்தப்படுகிறார். அத்துடன் ப்ரோமோ முடிந்துவிட்டது.