சென்னை: சவரனுக்கு ரூ.136 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,872-க்கு தங்கம் விற்பனை ஆகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் மீதான முதலீடுகள் என்பது இந்தியாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிய சாதாரண பொதுமக்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை அனைவரும் சமீப காலமாக தங்கத்தையே சிறந்த முதலீடாக கருதுகின்றனர். தங்கத்தின் விலையானது பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை இரு வேளைகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம்!
அதிலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருவதால் கச்சா எண்ணெய் விலையானது பங்கு சந்தையில் அதீதமாக உள்ளது. மேலும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதிலும் சில நேரங்களில் அதிர்ஷ்டவசமாக சரிவையும் சந்தித்து வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிய XE வகை வைரஸ் தொற்று பரவல்? மீண்டும் ஊரடங்கு அமல்!
இன்று மாலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.38,872-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ரூ.4,859-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம் ரூ.42,064-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.71-க்கும், ஒரு கிலோ ரூ.71,000-க்கும் விற்பனையாகிறது.