ரயில் பயணிகள் கவனத்திற்கு – சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம்!
புதுச்சேரி – திருப்பதி வழித்தடத்தில் செல்லும் ரயில் முன்னதாக டீசல் ரயிலாக இருந்து வந்த நிலையில், தற்போது மின் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகளில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்டண உயர்வு:
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக நாட்டில் பல்வேறு முக்கிய ரயில் வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் உட்பட நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வலைத்தடங்களில் ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் இவை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் அபாயம் குறைந்த பின்னர் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
இதேபோல் முன்னதாக புதுச்சேரி – திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஏப்ரல் 1ம் தேதி முதல் புதுச்சேரி – திருப்பதி வழித்தடத்தில் ரயில் சேவை மின் மயமாக்கப்பட்டு விரைவு ரயிலாக இயங்கி வருகிறது. இதனால் குறைந்த பட்ச கட்டணம் அதிகமாக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வருவாய் கிடைக்கும் சிறிய ரயில் நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை.
IIT மெட்ராஸ் பணிவாய்ப்பு – ரூ.18,000/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். புதுச்சேரி – திருப்பதி ரயிலில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி வரையில், 25 ரூபாய் கட்டணத்தில், எளிதாக சென்று வந்தோம். விரைவு ரயில் சேவை என்ற பெயரில், ரயில் கட்டணம் இரட்டிப்பாக வசூலிப்பது வேதனை அளிக்கிறது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரி மின் விரைவு ரயிலாக மாறிய பின், அதற்குரிய மிக குறைந்த கட்டணமாக, 30 ரூபாய் ஆக உள்ளது. இதனால் சில ரயில் நிறுத்தங்களில் நிறுத்துவதை தவிர்த்து, விரைவாக செல்வதற்கு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது, விரைவாக செல்லும் ரயில் பயணியருக்கு சவுகரியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.