தமிழகத்தில் புதிய XE வகை வைரஸ் தொற்று பரவல்? மீண்டும் ஊரடங்கு அமல்!
தமிழகத்தில் புதிதாக உருமாறிய XE வகை வைரஸ் தொற்று பரவல் பற்றி எழுந்த கேள்விக்கு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பதில் அளித்துள்ளார்.
புதிய வைரஸ்:
தமிழ்கத்தில் கொரோனா தொற்றின் பரவல் அச்சம் காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் நிலையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று வரிசையாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என்று வரிசையாக தாக்குதலை தொடர்ந்தது. இறுதியாக கொரோனா 3ம் அலையின் உச்சத்தின் போது தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 3 சதவீதம் DA உயர்வு – அரசு விளக்கம்! வெளியான குட் நியூஸ்!
அதன்பிறகு பாதிப்பின் தாக்கம் குறைந்த பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனால் தற்போது தமிழகத்தில் எந்த வித கொரோனா கால நோய் தடுப்பு கட்டுப்பாடுகளும் அமலில் இல்லை. இந்நிலையில், கொரோனாவின் தாயகமான சீனாவில் தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை தொற்று தாக்குதலை தொடங்கியுள்ளது. XE வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த வகை வைரஸ்கள் மிகவும் அதிக வேகமாகவும், வீரியம் மிகுந்ததாகவும் உள்ளது.
ONGC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-
இதனால் அங்கு மிகவும் தீவிர நிலை நிலவி வருகிறது. அதீத தாக்குதல் காரணமாக அண்டை நாடுகள் எளிதில் பாதிக்கப்படக் கூடும். இதனால் இந்தியாவின் புதிய வகை வைரஸ் குறித்த அச்சம் எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவருக்கு XE வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.