சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் கவலை!
தமிழகத்தில் தங்கம் விலை இன்றைய நிலவரப்படி அதிகரித்து இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
முதலீட்டர்களுக்கு என்றும் லாபம் தரும் பொருளாக தங்கம் இருக்கிறது. தங்கம் வாங்குவதால் ஆபத்து குறைவாக இருப்பதால் பலர் அதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. தங்கம் விலை எவ்வளவு தான் அதிகரித்தாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் சற்றும் குறையாமல் இருக்கிறது. மேலும் தற்போது உள்ள மாதங்களில் அதிகம் திருமணம் நடைபெறுவதால் மக்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
பொதுவாக தங்கத்தின் விலை நேற்றைய நாளை விட இன்றைய தினத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். ஒரு சில நாட்களில் இரண்டு முறை கூட தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,775க்கு விற்பனை செய்யப்படுகிறது.
B.Com பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை அதிகரித்து இருப்பதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,755க்கும், சவரண் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.