சென்னை: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனாவின் பிடியிலிருந்து இப்போது தான் தப்பித்து வருகின்றனர். பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது தான் மக்கள் தங்களது பணிக்கு சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவர்கள் பொருளாதார ரீதியாக தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இத்தகைய இக்கட்டான நிலையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் இதனை எப்படி சமாளிப்பார்கள். பெரியவர் முதல் சிறுவர்கள் வரை சாமானிய மக்கள் உட்பட அனைவரும் அவசர தேவைகளுக்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
குழந்தையை இழந்த ஜெனி, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!
கடந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் ஒரே விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. அதனை தொடர்ந்து டில்லியில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.104.79 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.93.52 க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.105.43 க்கும், டீசல் 1லிட்டர் ரூ.96.63 க்கும், மும்பையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.110.75 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.101.40 க்கும், பெங்களூரில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.108.44 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.99.26 க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் 102.10 ரூபாய்க்கும், டீசல்1 லிட்டர் 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடைகள், கோவில்கள் திறப்பு & வேலைவாய்ப்பு முகாம்கள் – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
இன்று அக்-15 நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று பெட்ரோல் இ லிட்டர் 102.40 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 98.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறாக பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து ஒரே விலையில் நிர்ணயம் செய்யப்பட்டது மக்களிடையே மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும் தற்போது தொடர்ந்து 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலையானது 150 ரூபாயை எட்டிவிடும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மக்களும், வாகன ஓட்டிகளும் மட்டும் தான். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.