குழந்தையை இழந்த ஜெனி, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனிக்கு கரு கலைந்து விட்டதாக டாக்டர் கூற அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் செழியனிடம் பேச மறுத்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் ஜெனி.
பாக்கியலட்சுமி எபிசோடு
இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடில் காலையில் பதறி அடித்துக்கொண்டு ஓடி வரும் ஜெனியை பார்த்து அனைவரும் பதறுகின்றனர். எல்லாரும் என்னவென்று பரபரப்பாக கேட்க ஜெனி நடந்ததை கூறுகிறார். பிறகு செழியனை வண்டியை எடுக்க சொல்லி அனைவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு ஜெனியை செக் செய்து பார்க்கும் டாக்டர் கரு கலைந்து விட்டதாக கூறுகிறார். டாக்டரிடம் எப்படி ஆச்சு என பாக்கியலட்சுமி கேட்க நான் தான் கவனமா இருக்க சொல்லிருக்கேன்ல என டாக்டர் கூறுகிறார்.
பாஸ்கரின் மனதை கெடுக்கும் விக்கி, ஆதிக்கு பைக் தர மறுக்கும் சந்தியா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு!
அப்போது குழந்தையை கலைக்க சொல்லி தான் கூறியதை நினைத்து வருத்தப்படுகிறார் செழியன். விஷயத்தை கேட்டதும் முதல் வாரிசுக்கு இப்படி ஆச்சே என பாட்டி விடாமல் அழுதுகொண்டே இருக்கிறார். பிறகு ஜெனி கண் முழித்து விட்டதாக நர்ஸ் வந்து கூற அனைவரும் உள்ளே சென்று பார்க்கின்றனர். பாட்டியை பார்த்து பாப்பா இல்லையா என ஜெனி கேட்க பாட்டி அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார். ஆனால் நடந்ததை சொல்லி ஜெனி விடாமல் அழுதுகொண்டே இருக்கிறார்.
ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!
பிறகு ஜெனி கையை செழியன் பிடிக்க கையை தட்டி விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறார் ஜெனி. இப்போது வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல பாப்பா இல்லையென சொல்லி இனியாவும் அழுகிறார். தொடர்ந்து எழில் வந்து ஜெனியின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு செழியனுக்கும் ஆறுதல் சொல்லுகிறார். கோபியும் வந்து ஜெனியை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு செல்கிறார். அனைவரும் சென்றதும் ஜெனியிடம் பேச வரும் செழியனை ஜெனி தவிர்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.