தமிழகத்தில் கடைகள், கோவில்கள் திறப்பு & வேலைவாய்ப்பு முகாம்கள் – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் ஆலோசித்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொற்றின் கட்டுக்குள் வந்ததால் கட்டுப்பாடுகளில் அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. இருப்பினும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் பல பண்டிகைகள் இருப்பதால் நடவடிக்கையாக கடந்த மாதம் இறுதியாக பல கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் அக்டோபர் 31ம் தேதி வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் கடந்த அக்டோபர் 13ம் தேதி முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தற்போது, முதல்வர் வர இருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய தளர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்களை உத்தரவிட்டுள்ளார். அரசின் ஆணை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதால் இன்று முதல் ஏற்கனேவே அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளும் இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் அனுமதி அளிக்கப்படுகிறது.
- அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படலாம். அனைத்து பணியாளர்களும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
- நவம்பர் 1ம் தேதி முதல் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்களுக்கு கடற்கரைகளில் அனுமதி.
- நவம்பர் 1ம் தேதி முதல் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு அனுமதி. திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
- கடைகளில் வாயிலில் சானிடைசர்கள் மற்றும் இதர பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களுக்கு, வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- நோய் கட்டுப்பாட்டு அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.