தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து பண்டிகை தினங்கள் வருவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (அக்.16) விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பிறருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் எவ்வித தொய்வும் இன்றி அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மறுபுறம் அங்கன்வாடிகள், நர்சரி பள்ளிகளை திறக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.
TNSTC தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்16 கடைசி நாள்!
வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் அக்டோபர் 14, 15 மற்றும் 17ம் தேதிகள் விடுமுறை தினங்களாக உள்ளது. இடையில் அக்.16ம் தேதி சனிக்கிழமை ஒருநாள் மட்டும் பள்ளிகளை திறக்காமல் அன்றும் விடுப்பு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வி ஆணையர் அக்.16ம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
தமிழகத்தில் நவ.1 முதல் மழலையர் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு – அரசு உத்தரவு!
இதன்படி தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட உள்ள நிலையில் நவம்பர் 4 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என எழுந்த கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.