முதல் வாரத்திலேயே நம்பர் 1 இடத்தை பிடித்த ‘செல்லம்மா’ – சூப்பர் வரவேற்பு!
விஜய் டிவியில் சமீபத்தில் பல சீரியல்களும் அதிரடியான கதைக்களத்துடன் சென்று வருவதால், பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் ஒவ்வொரு சீரியலிலும் கதைக்களம் விறுவிறுப்பாக இருப்பது போல் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற புதிய தொடரை பற்றி காணலாம்.
செல்லம்மா:
சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களின் அன்றாட பொழுதுபோக்கில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் தான் காலை முதல் இரவு வரை இடைவிடாது அனைத்து சேனல்களிலும் சீரியல்கள் இடம் பிடித்து வருகிறது. முன்னதாக வார நாட்களில் மட்டுமே சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. சீரியல்களின் முக்கிய கதை திருப்பமாக உள்ள எபிசோட்களை வர இறுதி நாட்களில் நீண்ட நேர சிறப்பு எபிசோடாக சேனல்கள் ஒளிபரப்புகிறது.
பாக்கியா உங்கள் மனைவி தானா? உண்மையை கண்டுபிடித்த ராதிகா! உறைந்துபோன கோபி!
அந்த வகையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த மற்றும் அதே சமயத்தில் தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ற வகையிலான கதைக்களத்தை விஜய் டிவியில் வரும் சீரியல்கள் தான் கொண்டுள்ளது. இதனால் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. தற்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த வேலைக்காரன் சீரியல் முடிந்துள்ளதால், அந்த நேரத்தில் செல்லம்மா என்ற புத்தம் புதிய மெகா தொடர் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
தன்னை ஏமாற்றி விட்டு, வேறு ஊருக்கு சென்று அங்கு வேறு பெண்ணை கல்யாணம் செய்துள்ள கணவனை விட்டு பிரிந்து தன் மக்களிற்காக ஒற்றை ஆளாக போராடும் ஒரு தாயின் கதையாக செல்லம்மா சீரியல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் நாயகியாக அன்ஷிதா அக்பர்ஷா செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது மகளிற்காக பல துயரங்களையும் தாங்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 3.8 பாயிண்ட்களை முதல் வாரத்திலேயே பெற்று, நகர்ப்புறங்களில் மதியத்தில் பார்க்கப்படும் நம்பர் ஒன் சீரியல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.