பாக்கியா உங்கள் மனைவி தானா? உண்மையை கண்டுபிடித்த ராதிகா! உறைந்துபோன கோபி!
மூர்த்தி வந்து ராதிகாவை சந்தித்துவிட்டு போனதும் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. இந்நிலையில் பாக்கியா தான் கோபி என்கிற உண்மையை ராதிகா அறிந்து கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி, ராதிகாவிற்கு உண்மையை தெரியவிட கூடாது என போராடி கொண்டிருக்கிறார். குடும்பத்தினரிடமும், ராதிகாவிடமும் லட்சக்கணக்கில் பொய் சொல்லி இரு பக்கமும் எந்த சந்தேகமும் ஏற்படாமல் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது கோபி வசமாக மாட்டிக்கொண்டார். ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா வந்திருந்த போது மீட்டிங் என பொய் சொல்லி தப்பித்து விட்டார். ராதிகா வீட்டை விட்டு கிளம்பியதுமே கோபி ராதிகாவை சென்று சந்திக்கிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவுடன் கோபி ஏன் இவ்வளவு நெருக்கமாக நின்று பேசுகிறார் என மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. பின்பு, நேரடியாக ராதிகாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைத்து ராதிகா வீட்டிற்கு மூர்த்தியும், தனமும் செல்கிறார்கள். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என மூர்த்தி கேட்கிறார். ராதிகா கோபியின் புகைப்படத்தை காட்டியதுமே மூர்த்திக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. பின்பு, ராதிகாவிடம் மூர்த்தி நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் நல்லவர் கிடையாது. உங்களையும் அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். நீங்கள் அவரின் குடும்ப புகைப்படத்தை கேளுங்கள். அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு எதுவாக இருந்தாலும் நீங்களே முடிவெடுங்கள் என ராதிகாவிடம் மூர்த்தி சொல்லிவிட்டு செல்கிறார்.
ராதிகாவிடம் வேறு பெண்ணை காட்டி மனைவி என சொல்லும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பின்பு ராதிகாவிற்கும் கோபி மீது அடுக்கடுக்காய் சந்தேகம் வருகிறது. கோபி வீட்டிற்கு வந்ததும் உங்களது குடும்பத்தினர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ஆனால், கோபி புகைப்படத்தை காட்ட மறுக்கிறார். புகைப்படத்தை காட்டுங்கள் அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறுகிறார். உண்மை தெரிந்துவிட்டதோ என கோபி நடுங்கி கொண்டிருக்கிறார். உடனே ராதிகா, கோபியும் பாக்கியாவும் இருக்கும் புகைப்படத்தை கோபியிடம் காட்டி நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கூறி அழும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.