தமிழகத்தில் ரயில் சேவைகள் மாற்றம், ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரயில் சேவைகள் மாற்றம், ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ரயில் சேவைகள் மாற்றம், ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ரயில் சேவைகள் மாற்றம், ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஜூலை 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் மாற்றுப்பாதையிலும், சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே அறிவிப்பு:

தமிழகத்தில் மக்கள் பலர் ரயில் பயணங்களை அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் ரயில் விபத்துகளை தவிர்க்க அடிக்கடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 24-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதோடு, சில ரயில்கள் ரத்து செய்ய இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் படி நாமக்கல், கரூர் வழியாக செல்லும் ரயில்களான, மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16232), மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ஆகிய ரயில்கள் நாளை (ஜூலை 24) முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஈரோடு வழியாக செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாஸ்கோடகாமா – நாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் (17315) வரும் ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1, 8-ம் தேதிகளிலும், ஸ்ரீ மட்டா வைஸ்னோ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஜூலை 28 மற்றும் மற்றும் ஆகஸ்ட் 5, 11 தேதிகளிலும், சண்டிகார் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (12688) ஜூலை 25, ஜூலை 29, ஆகஸ்ட் 1,5,8,12 ஆகிய தேதிகளிலும் ஈரோடு வழியாக செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா பரவல் எதிரொலி! சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்!

அது மட்டுமில்லாமல் ஓகா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்(19568) ஜூலை 29, ஆகஸ்ட் 5,12-ம் தேதிகளிலும், கச்சிகுடா – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (17615) ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 6,13-ம் தேதிகளில் ஈரோடு ரயில் நிலையம் செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மறு மார்க்கத்தில் ஈரோடு செல்லாமல் கரூர், நாமக்கல் ,சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் விபரம், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16235) நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்கள், திருநெல்வேலி – ஸ்ரீ மட்டா வைஷ்னோ தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயில் (16787) வரும் திங்கட்கிழமை மற்றும் அடுத்த மாதம் 1,8-ம் தேதிகளில், மதுரை – சண்டிகார் எக்ஸ்பிரஸ் ரயில் (12687) வரும் 27,31 ஆகிய தேதிகள் மற்றும் அடுத்த ஆகஸ்ட் 3,7,10,14-ம் தேதிகளில், தூத்துக்குடி – ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் (19567) ஜூலை 24 மற்றும் 31-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஈரோடு வழியாக செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், நாகப்பட்டினம் – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் (17316) வருகிற 27 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3,10-ம் தேதிகளில், மதுரை – கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் (17616) வரும் 31-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 7,14-ம் தேதிகளில், மயிலாடுதுறை – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16231) நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஈரோடு வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

மேலும், நாகப்பட்டினம் – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் (17316) வருகிற 27 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3,10-ம் தேதிகளில், மதுரை – கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் (17616) வரும் 31-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 7,14-ம் தேதிகளில், மயிலாடுதுறை – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16231) நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஈரோடு வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்த விவரங்களுக்கு சேலம் -0427-2330194, ஈரோடு-0424 2284812, கரூர்-0432 4232139 உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!