தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா பரவல் எதிரொலி! சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சுகாதாரத்துறை விளக்கம்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கமும் போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு தமிழக அரசின் தீவிர கட்டுப்பாடு நடவடிக்கையின் மூலமாக தொற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்குள் இரண்டாம் அலையின் தாக்கம் தொடங்கியது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தியதன் மூலம் அதிகமான பாதிப்பில் இருந்து மக்கள் தப்பிக்க முடிந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2500 ஐ தாண்டியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு!
மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்றும், கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.