தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 17,18 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஜூன் 17 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – திடீர் அறிவிப்பு!
அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகம் கனமழை பெய்யும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.