போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – திடீர் அறிவிப்பு!
புதுச்சேரியில் இயங்கி வரும் பல வாகனங்கள் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் அந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம்:
இந்தியாவில் அவ்வப்போது போக்குவரத்து துறை சார்பாக மக்களின் பாதுகாப்புக்காக போக்குவரத்து விதிமுறைகள் மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. அதாவது, குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது எனவும், இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து தான் வண்டியோட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த வகையில் அதிகமாக சத்தம் எழுப்ப கூடிய வாகனங்களில் கட்டாயமாக ஜி.பி.எஸ் கருவி பொருத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஜூலை 18 வரை பள்ளி & கல்லூரிகள் மூடல் – கனமழை எதிரொலி!
அதாவது, புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், உடனடியாக அந்த அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அனைத்து தனியார் பேருந்துகளிலும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பேருந்துகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்த வேண்டும் எனவும், 3 முறைக்கு மேல் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.