தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சூறாவளி மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய 32 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. மேலும் மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை தொடர கூடும். இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நாளை, நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை பொறுத்தவரையில் வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. மேலும் நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!