ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தபடியே இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.80 வரைக்கும் குறைந்து சவரனுக்கு ரூ.38,120 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பல மடங்காகப் பெருகிக் கொண்டே இருக்கிறது. தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே சென்றாலும் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். தாங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டுமென எண்ணுகின்றனர். மேலும், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான திட்டமாகவும், எதிர்காலத்திற்கு மிகவும் உபயோகமான திட்டமாக இருக்கும் எனவும் நம்புகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகுதான் தங்கத்தின் விலை ரூபாய் 30 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 ஆயிரம் வரைக்கும் கூட விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்து அவ்வப்போது தங்க விலை உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மாஸ்க் போடாவிட்டால் ரூ.500 அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,765க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.