தமிழகத்தில் மாஸ்க் போடாவிட்டால் ரூ.500 அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
மதுரையில் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். மேலும் இது குறித்து விவரங்களை காண விரும்பினால் இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளவும்.
அபராத தொகை:
கொரோனா வைரஸ் சீனாவில் ஒரு பகுதியான யூகான் என்ற பகுதிகளில் இருந்து அனைத்து நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, விமான நிலையங்கள், கோவில் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், பஸ், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்பின்னர், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பின் அதாவது இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியாமல் எந்த ஒரு அச்சமின்றி பொது இடங்களில் வலம் வந்தனர். இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதிகப்பட்சமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், திருநெல்வேலி , திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா , ஒரே நாளில் 27 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!
ஆனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் படிப்படியாக வேகமெடுக்கிறது. கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிபவர்களுக்கு ரூ.500 அபராதம் நிர்வகிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்