TN TRB கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்:
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித தேர்வுகளையும் நடத்தவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே நடத்தப்படாத தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலையை நோக்கி திரும்பி வரும் வேலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் (TRB) காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. அந்த வகையில் தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முதலமைச்சர் உத்தரவு!
அதாவது விண்ணப்பதாரரின் கூடுதல் தகுதிகள், பணி அனுபவ சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில் மேற்சொன்ன ஆவணங்களை பதிவேற்றம் செய்ய மார்ச் 25ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்களின் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது உரிய பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.