மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் அரசு ஈடுபட்டது. இதையடுத்து ஜூலை மாதத்தில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது மத்திய ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (மார்ச் 19) பள்ளிகளுக்கு விடுமுறை – ஞாயிற்றுக்கிழமை செயல்படும்! அரசு அறிவிப்பு!
மேலும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. இதனை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்னும் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி உயர்த்தப்பட்டால் அகவிலைப்படியை 34% வரை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 18 மாத கால நிலுவை தொகை, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி உயர்வை பெற்றால் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு ஏற்படும். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்ச ஓய்வூதிய ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் 18 மாத நிலுவை தொகையை ஒரே தவணையாக ஊழியர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த நிலுவைத்தொகை ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் என்று கணக்கிடப்படுகிறது.