மத்திய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு!!
மத்திய அரசு அறிவிப்பு:
மத்திய அரசானது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கோவிட் -19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், அமைச்சகமும், அமைச்சரவை செயலகங்களும் கண்டிப்பாக மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனவ பட்டதாரிகளுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
பாதுகாப்பு வழிமுறைகள்:
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 27ம் தேதி கோவிட் -19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. அரசின் விதிமுறைகளை கட்டுப்பாட்டு பகுதி, கண்காணிப்பு பகுதி மற்றும் எச்சரிக்கை பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- அரசு துறைகளில் உள்ள அனைத்து மட்ட பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.
- உயர் அதிகாரிகள் அறிவித்துள்ள படி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே அலுவலகத்துக்கு வர வேண்டும்.
- கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர தேவை இல்லை. அவர்கள் வீட்டிலிருந்த படியே பணியை தொடரலாம்.
- அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு முறை இல்லை.
- கூட்டங்கள் அனைத்தும் வீடியோ காணொளி மூலம் நடத்தப்படும்.
- ஊழியர்கள் அனைவரும் அரசு பரிந்துரைத்த முகக்கவசம், சானிடைசர் மற்றும் தகுந்த சமூக இடைவெளி முதலியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- மேலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக அடுத்த அறிவிப்பு வரும் வரை கடைபிடிக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்