மத்திய அரசால் மாதம் 15 லட்ச வேலைவாய்ப்புகள் – அமைச்சர் பேட்டி!!

0
மத்திய அரசால் மாதம் 15 லட்ச வேலைவாய்ப்புகள் - அமைச்சர் பேட்டி!!
மத்திய அரசால் மாதம் 15 லட்ச வேலைவாய்ப்புகள் - அமைச்சர் பேட்டி!!
மத்திய அரசால் மாதம் 15 லட்ச வேலைவாய்ப்புகள் – அமைச்சர் பேட்டி!!

நாட்டில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாதந்தோறும் மத்திய அரசால் 15 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ரோஸ்கர் மேளா மூலம் வேலை பெற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமன ஆணைகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி அவர்கள் காணொலி மூலமாக ரோஸ்கர் மேளாவில் வேலை பெற்ற 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து ராஜஸ்தானின் அஜ்மீரில் ‘ரோஸ்கர் மேளா’ மூலமாக பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இதில் இவர் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையிலும் இந்தியாவில் புதிதாக வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கிக் கொண்டே வருகிறது.

மாநகர போக்குவரத்துத்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – இனி தவணைத்தொகை பிடித்தம் செய்யப்படுமா?

Exams Daily Mobile App Download

மேலும் கடந்த ஒரு மாதத்தில் ‘ரோஸ்கர் மேளா’ மூலமாக மகாராஷ்டிரா, டாமன் மற்றும் டையூ, குஜராத், உத்தரபிரதேசம், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவு, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமன கடிதங்களை பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!