மாநகர போக்குவரத்துத்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – இனி தவணைத்தொகை பிடித்தம் செய்யப்படுமா?
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் கடன்களை மாநகர போக்குவரத்து கழகம் பிடித்தம் செய்து வழங்கும் நிலையில் இல்லை என கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திற்கு எதிராக போக்குவரத்துறை ஊழியர்களின் சார்பாக வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் உதவிகளை வழங்க கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. மேலும் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வாங்கும் கடன்களுக்கான தவணை தொகையை அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து ஊழியர்களுக்கு மீதமுள்ள சம்பளத் தொகையை வழங்க வேண்டும். ஆனால் இவ்வாறு போக்குவரத்து கழகம் செய்வதில்லை என ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் வங்கிகளுக்கு அபராத வட்டியை செலுத்த வேண்டிய நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள். மேலும் தவணைத் தொகையை போக்குவரத்து கழகமே பிடித்தம் செய்து வைத்துக் கொள்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா – 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போக்குவரத்துக்கு ஊழியர்களின் தவணைத் தொகையை பிடித்தம் செய்து வழங்கும் நிலையில் நிர்வாகம் இல்லை என மாநகர போக்குவரத்து கழகம் கூட்டுறவு சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்திற்கு எதிரானது. இந்த கடிதத்தை ரத்து செய்து போக்குவரத்து கழகம் தான் ஊழியர்களின் தவணை தொகையை பிடித்தம் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது
Exams Daily Mobile App Download
இதே போன்ற வழக்கை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக கூட்டுறவு சங்கமும் தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநகர போக்குவரத்து கழகத்தின் கடிதத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளனர்.