கோமாவில் இருந்து மீண்டு வந்த சீரியல் நடிகர்.. நடந்தது என்ன? அவரே சொன்ன விளக்கம்!
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமான குணசித்திர நடிகரான வேணு அரவிந்த், மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கோமா நிலையில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக அவரே பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகர் வேணு அரவிந்த்:
சன் டிவி யில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான குணசித்திர நடிகர் தான் வேணு அரவிந்த். அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பரிட்சியமானவர். மேலும் சீரியல்கள் மட்டுமில்லாமல் அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மீண்டு வரும் நிலையில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது
Follow our Instagram for more Latest Updates
அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதை கண்டறிந்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கினார்கள். அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் சில சினிமா வட்டாரங்கள் அது வெறும் வதந்தி தான் எனவும், வேணு நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான சின்னத்திரை காதல் ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பூரண குணமடைந்த வேணு, தான் நலமுடன் இருப்பதாகவும், இனிமேல் என்ன நடக்க இருக்கிறது என்பதை மட்டும் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அவருக்கு தலையில் இருந்த சின்ன கட்டியை நீக்கி இருப்பதாக தெரிவித்த அவர் இப்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நிறைய வில்லனாக நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததனால் தான் தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததாக வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்.