ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான சின்னத்திரை காதல் ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

0
ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான சின்னத்திரை காதல் ஜோடி - குவியும் வாழ்த்துக்கள்!
ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான சின்னத்திரை காதல் ஜோடி - குவியும் வாழ்த்துக்கள்!
ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான சின்னத்திரை காதல் ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நட்சத்திர ஜோடியான தீபக் அபி நவ்யாவிற்கு, இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அது குறித்த அறிவிப்பை அவர்களே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

சீரியல் ஜோடி:

சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு சினிமா நடிகை நடிகர்களை போல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் தீபக் அபிநவ்யா ஜோடி. தற்போது இருவரும் முன்னணி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தீபக் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். மேலும் அபிநவ்யா சன் டிவி கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

இனி இவரை பார்க்க முடியாது.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம்!

Exams Daily Mobile App Download

இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் அபி நவ்யா கர்ப்பமாக இருப்பதாக, புகைப்படங்கள் வெளியானது. நிறைமாத கர்ப்பமாக இருந்தாலும் அபி நவ்யா தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து வந்தார். இன்னும் அவர் மாறுவது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த அழகான ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர்களே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் அபிநவ்யா தொடர்ந்து சீரியலில் நடிப்பது குறித்து விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!