CDAC கணினி மேம்பாட்டு மையத்தில் 75+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்…!
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Manager, Project Officer, Sr. Project Engineer and Project Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ள பணிகளுக்கு என்று மொத்தமாக 76 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Chemical / Aerospace Engineering / Comp / IT / Electronics / Electronics & Telecommunication / communication / Electrical / Electrical & Electronics பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / ME / M. Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 0 முதல் 15 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- Project Engineer பணிக்கு 34 வயது, Project Manager பணிக்கு 45 வயது, Project Officer பணிக்கு 50 வயது மற்றும் Project Engineer பணிக்கு 37 வயது என பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், தேர்வாகும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் ஊதியம் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் (Written Test / interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- SC / ST / PWD / EWS / Female ஆகிய வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500/- மட்டும் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.