Rapido செயலிக்கு தடை குறித்த வழக்கு.. அரசு மேல்முறையீடு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த கூடாது என ரேபிடோ செயலிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அது குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
ரேபிடோ டாக்சி
தமிழகத்தில் சென்னை மாநகர காவல்துறை, மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது குற்றம் என அறிவித்ததால், ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டார்களில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது. இந்நிலையில் ரேபிடோ நிறுவனம் இதை எதிர்க்கு வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை பரிந்துரையில் தவறில்லை என உத்தரவிட்டது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ரேபிடோ தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 4% உயர்வு!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியது. அதன் பின் இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது டெல்லியில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறி அந்த உத்தரவு நகல் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பைக் டாக்சிக்கு அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.