முன்னணி நடிகை மும்தாஜ் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் – போலீஸ் அதிரடி விசாரணை!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை மும்தாஜ்:
தமிழில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். மோனிஷா என் மோனலிசா மற்றும் குஷி போன்ற படங்களில் இவர் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட இளசுகளின் மனதை இவர் கவர்ந்து இருக்கிறார். அதன் பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர் அதன் பின் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக என்ட்ரி கொடுத்தார். திருமணம் செய்து கொள்ளாத அவர் அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ‘எச்’ பிளாக் பகுதியில் சகோதரனுடன் வசிக்கிறார்.
‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்தது குழந்தை திருமணம் – ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்!
அவரது வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன் (23) என்பவர் கடந்த 6 வருடங்களாக பணிப் பெண்ணாக மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வருகிறார். அந்த பெண் மும்தாஜ் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் சுற்றி திரிந்ததால், அதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முஜூதீன் மற்றும் அவரது தங்கை அங்கு பணிப்பெண்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக தனக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் மேலும் மொபைல் போன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் அதனால் எனக்கு அங்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை எனவும் தன்னை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது தங்கையும் இங்கே தான் வேலை செய்வதாகவும், அக்கா தங்கை இடையே பிரச்சனை என்பதால் அவர் இங்கிருந்து செல்ல நினைக்கிறார் எனவும், இருவரையும் நாங்கள் எங்கள் வீட்டு பெண்களாகவே கருதி வருவதாகவும் நடிகை மும்தாஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் இங்கேயே இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.