தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகம் கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த கால அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வரும் இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டு இருந்த ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவித்தனர். தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.
அரசியலில் குதித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தனம் சுஜிதா – வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த கால அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது மருந்தாளுநர் பதவிக்கு 1 காலியிடம் அறிவித்து உள்ளனர். மேலும் அதற்கு வயது வரம்பாக 35 க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதியாக மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அது தவிர தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். அடுத்தாக, துணை சுகாதார செவிலியர்கள் பதவிக்கு 7 பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு வயது வரம்பாக 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அது தவிர தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், கடைசியாக, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 5 காலிப் பணியிடங்களும், அதனை தொடர்ந்து கல்வித் தகுதியாக, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பாக, 40 க்குள் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவித்து உள்ளனர். மேலும் இதற்கு நேர்முகத்தேர்வுகளும் வைத்து உள்ளனர். அதற்கு வருபவர்கள், கல்வி சான்றிதழ்களின் நகல் மற்றும் அசல், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், மற்றும் கொரோனா பணி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.