தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை – ஏற்பாடுகள் தீவிரம்!

0
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை - ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை - ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை – ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் 50 சதவீத பயணியருடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பேருந்துகள் இயக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்தியது. அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சில மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத பயணியருடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள 3 ஆம் வகை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவற்றில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் ஜாதிச் சான்றிதழ் வழங்க RTO – நீதிமன்றம் உத்தரவு!

அதே போல் நாளை பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள 2 ஆம் வகை மாவட்டங்களான அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார், விருதுநகர் ஆகியவற்றில் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

ஆனால், 50 சதவீத பயணியருடன் மட்டுமே பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19,290 பேருந்துகளில், மாநகர பஸ்கள் 2,200 மற்றும் விரைவு பஸ்கள் 365 நாளை முதல் செயல்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!