இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து – கொரோனா எதிரொலி!!
நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இம்மாத இறுதியில் இந்தியா வரவிருந்த, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய வருகை ரத்து
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளும் போராடி வருகிறது. இருந்தாலும் இந்த நோய் தாக்கம் சற்றும் குறையவில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்தியா வரவிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். அப்போது இங்கிலாந்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் அவர் மீண்டுமாக இந்தியா வர இருந்தார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்துக்கு பிறகு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் இந்திய பயணம் முக்கியமானதாக கருதப்பட்டது.
தமிழகத்தில் தியேட்டர்கள் மூடல்? உரிமையாளர்கள் ஆலோசனை!!
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அவரது இந்திய பயணம் மீண்டுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையை எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.