கோபி போனை சந்தேகப்பட்டு பார்த்த பாக்கியா, உண்மை தெரிய வருமா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை வேண்டாம் என ராதிகா முடிவு செய்துவிட அதனால் கோபி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். பலமுறை ராதிகாவிடம் பேச முயற்சி செய்ய ராதிகா பேச மாட்டேன் என சொல்கிறார். இந்நிலையில் கோபி போனில் பேசியதை பார்த்த பாக்கியா கோபிக்கு தெரியாமல் போனை எடுத்து பார்க்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் காட்டப்பட்டு வருகிறது. கோபி எப்போது சிக்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கோபி குடும்பத்தை பற்றிய உண்மை எல்லாம் ராதிகாவுக்கு தெரிய வந்துள்ளது. நீங்க என்னை விட்டு போகாமல் இருக்க தான் நான் பொய் சொன்னேன் என கோபி பல முறை கெஞ்ச ஆனாலும், ராதிகா மனம் மாறாமல் இருக்கிறார். அதனால் கோபி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். உனக்காக விவாகரத்து வரை சென்று இருக்கிறேன் என கோபி கோவமாக பேச, ராதிகாவும் வெளியே போங்க என கோவமாக பேசுகிறார்.
கதிர் முல்லையை அடுத்து வீட்டை விட்டு வெளியேறும் மீனா – புதிய திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
அதனால் இருவருக்கும் இடையே சண்டை வர மயூரா அதை பார்த்து பயப்படுகிறார். என் அப்பா போல சண்டை போடாதீங்க என மயூரா சொல்ல கோபி எதுவும் பேச முடியாமல் கிளம்பி செல்கிறார். மேலும் வீட்டில் அனைவரிடமும் கோபியால் பேச முடியவில்லை. இதற்கிடையே கோபி யாருடனோ பழக்கமாக இருப்பதாக பாக்கியா நினைக்கிறார். அவர் மீது செல்வி சொன்னது போல சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி பல முறை ராதிகாவுக்கு போன் செய்கிறார். ஆனால் ராதிகா போனை எடுக்காமல் இருப்பதால் அவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். நீங்க இருவர் தான் எனக்கு முக்கியம் நீங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கோபி பேச அதை பாக்கியா கேட்கிறார். பின் கோபி தூங்கியதும் அவருடைய போனை எடுத்து பார்க்கிறார். அதில் R என ராதிகாவின் நம்பர் இருக்கிறது. அதனால் கோபி இந்த முறை பாக்கியாவிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துவிடுகிறார்.