கதிர் முல்லையை அடுத்து வீட்டை விட்டு வெளியேறும் மீனா – புதிய திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
முல்லைக்கு மருத்துவம் பார்த்த காசை வைத்து அவ்வப்போது வீட்டில் சண்டை வந்து கொண்டிருந்ததால் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது மீனாவும் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே போகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்ததை வைத்து தான் மீனா சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் செலவு செய்து முல்லைக்கு செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சையை செய்தனர். ஆரம்பத்திலிருந்தே குடும்பத்தினர்கள் முல்லைக்கு இவ்வளவு செலவு செய்தது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதுவும் இந்த 5 லட்சத்தை ரெடி செய்ய குடும்பத்தினர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானையும் பாதியிலேயே நிறுத்தி மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள். இவ்வளவு செலவு செய்தும் கூட முல்லைக்கு இந்த சிகிச்சை பலனளிக்காமல் போய்விட்டது. தற்போது வரைக்கும் அந்த பணத்தை வைத்து மீனா சண்டை போட்டு கொண்டிருக்கிறார். எப்படியாவது குடும்பத்தில் பிரச்சனையை கிளப்ப வேண்டுமென்றே மூர்த்தியிடம் செலவுக்காக காசு கேட்கிறார். உடனே மூர்த்தி தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம் என கூறிவிடுகிறார். முல்லைக்காக மட்டும் அவ்வளவு செலவு செய்தீர்கள் என மீனா சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
கோபி பற்றி தெரிந்த பின் ராதிகா எடுக்கும் திடீர் முடிவு – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
மீனாவை தொடர்ந்து ஜனார்தனனும் வீட்டில் வந்து சண்டை போட ஆரம்பித்துவிட்டார். எங்களால் தானே குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை என கதிர் கண்டிப்பாக அந்த பணத்தை நாங்கள் திருப்பி கொடுப்போம். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என கூறுகிறார். இதற்கு மேலும், இந்த வீட்டில் ஒன்றாக இருக்க முடியாது என முல்லையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். உடனே மீனாவும் இந்த வீட்டில் இருக்க முடியாது என வீட்டை விட்டு வெளியேறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.