காதலிக்காக, மனைவியை போலீசில் சிக்க வைக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி – கோபத்தில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் பார்வையாளர்கள் கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏனென்றால் எந்த கணவனும் செய்யாத காரியத்தை செய்திருக்கும் கோபியை தற்போது வெளியான ப்ரோமோவில் பார்த்தே ரசிகர்கள் பயங்கர கோபத்தை வெளிக்காட்டி வந்தால், எபிசோட்டை பார்க்கும் போது என்ன நடக்கும் என்று சொல்லவா வேண்டும். அந்த அளவுக்கு அவர் பண்ணிய செயல் கடுப்பாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் முந்தைய எபிசோடில் ராதிகா தனது மகள் ராதிகா மயூ பிறந்தநாளுக்காக ஆசிரமத்தில் இருப்பவர்களுடன் கொண்டாட முடிவு எடுத்து மதிய உணவு, கேக் கட்டிங் என கிராண்ட் பிளான் செய்து சாப்பாடு டெலிவரியை வழக்கம் போல் பாக்கியாவிடம் கொடுத்திருந்தார். அதன் படி சாப்பாடும் டெலிவரி ஆனது. ஆனால் ராதிகா, கோபியை எப்படியாவது பாக்கியாவிடம் அறிமுகப்படுத்த நினைத்த செயலை மட்டும் எப்போதும் போல் பல தகிடுதத்தங்கள் செய்து கெடுத்து விட்டார்.
திடீரென மயங்கிய முல்லை – உண்மையாகவே இது கர்ப்பம் தானா? குழப்பத்தில் கதிர்!
இவ்வாறு இருக்கையில் ராதிகா விடாப்பிடியாக கோபியை எப்படியாவது டீச்சரை பார்த்தே ஆக வேண்டும். இந்த முறை என்ன காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது என பிடிவாதமாக அழைத்து செல்கிறார். அதை தொடர்ந்து தற்போது வெளியான எபிசோடில் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கையில் ராதிகாவுக்கு அழைப்பு ஒன்று வருகிறது. அதில் ஆசிரமத்தில் குழந்தைகள் எல்லாம் சாப்பாட்டை சாப்பிட பிறகு மயங்கி விழுகிறார்கள் என்ற தகவலை கேட்ட ராதிகா அதிர்ச்சியாகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரமத்துக்கு சென்று பார்க்கையில் குழந்தைகள் அவசர உதவி வாகனத்தில் மயங்கிய நிலையில் ஏற்றுவதை பார்த்து வேதனை அடைகிறாள்.
அப்போது சம்பவ இடத்திற்கு போலீஸ் வர, அவர்களிடம் பாக்கியா தான் சமையல் செய்து கொடுத்தார் என ராதிகாவுக்காக தன் சொந்த மனைவியை கோபி போட்டுக் கொடுக்கிறார். உடனே பாக்கியா வீட்டுக்கு செல்லும் பெண் போலீஸ் அவரிடம் காரணத்தை சொல்லி கைது செய்கின்றனர். இவ்வாறு பாக்கியாவின் இந்த நிலையை பார்த்து மொத்த குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுது துடிக்கின்றனர். பாக்கியாவை காப்பாற்ற யார் வருவார்? என்பது தான் சஸ்பென்ஸாக உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கோபத்தில் கோபி பாக்கியா கணவராக பாக்கியாவுக்கு பேசுவாரா? அல்லது ராதிகாவை மட்டும் காப்பாற்றி வீட்டுக்கு கிளம்பி விடுவாரா? சாப்பாடு விஷயம் என்ன ஆனது ? என்று பல குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.