திடீரென மயங்கிய முல்லை – உண்மையாகவே இது கர்ப்பம் தானா? குழப்பத்தில் கதிர்!
முல்லை குழந்தை பிறக்க செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில் தற்போது முல்லை திடீரென மயங்கி விழும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். ஏதோ கொலை குற்றம் செய்தது போல தான் முல்லை குடும்பத்தில் உள்ள எவரின் முகத்தையும் பார்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். என்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்று கொடுக்க முடியவில்லை என குற்ற உணர்ச்சியில் ஏங்குகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – குடும்பத்துடன் கலந்து கொள்ளும் பாக்கியா!
செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் என்பதால் என்ன செய்வது என அனைவரும் யோசிக்கிறார்கள். பின்பு, தற்போதைக்கு குழந்தை தான் முக்கியம் என நினைத்து மூர்த்தி வீடு கட்டுவதை நிறுத்தி வைக்கலாம் என கூறிவிடுகிறார். இதனை கேட்ட மீனாவிற்கு பயங்கரமாக கோபம் வந்து விடுகிறது. அனைவருக்கும் சொந்தமான வீட்டை எப்படி முல்லைக்காக மட்டும் விட்டு கொடுக்க முடியும் என நினைக்கிறார்.
மீனா பேசியதை மறைந்திருந்து முல்லை கேட்டுவிடுகிறார். பின்பு ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார். ஆனால், முல்லையின் உடல் நிலை தான் முக்கியம் என சொல்லி வீட்டில் உள்ள யாருமே பரிகாரம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் முல்லை தவித்து கொண்டிருக்கிறார். பின்பு, திடீரென முல்லைக்கு மயக்கம் வருகிறது. பின்பு எப்படியும் கர்ப்பமாக இருக்காது, சும்மா ட்ரை பண்ணி பாக்கலாம் என நினைத்து செக் பண்ணி பார்க்கிறார். அப்போது முல்லை கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.