Bigg Boss Tamil Season 5 Today – Promo 1 | கணவர் இறப்பு குறித்து சொன்ன பாவ்னி ரெட்டி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், ஐந்தாவது நாளான இன்று லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. தற்போது இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றுடன் ஐந்தாவது நாளாகிறது. முதல் வாரம் எலிமினேஷன் இருக்கிறது. இருந்தாலும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் தனது வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்களை சொல்ல வேண்டும். அதற்கு மற்ற போட்டியாளர்கள் லைக், டிஸ்லைக் மற்றும் இதயங்களை வழங்க வேண்டும். இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் போட்டியில் பலர் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் திருநங்கைகளின் கஷ்டத்தை பற்றி நமிதா மாரிமுத்து சொல்வது மக்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இன்றைய எபிசோடில் நடைபெறும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாவ்னி ரெட்டி பேசுகிறார். அவருடைய கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்தது பற்றி அவர் வருத்தத்துடன் பேசுகிறார். தான் அழ கூடாது என இருப்பதாக அவர் கூறுகிறார்.
8 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பாராத கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் தனது கணவருடன் சேர்ந்து பல கனவுகள் கண்டேன் ஆனால் அவர் திடீரென நடுவில் என்னை விட்டு போய்ட்டார். அதான் அவர் மீது கோவம் என சொல்கிறார். அவரை மிகவும் காதலித்ததாகவும், குழந்தை போல பார்த்துக் கொண்டேன் என சொல்கிறார். என் வாழ்க்கையில் நான் தனியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என என் தலையில் எழுதி இருக்கு என வருத்தத்துடன் சொல்கிறார்.