பணம் மோசடி செய்தவரை கண்டுபிடிக்கும் எழில், வருத்தத்தில் இருக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பணம் மோசடி செய்தவரை கண்டுபிடிக்கும் எழில், வருத்தத்தில் இருக்கும் பாக்கியா - இன்றைய
பணம் மோசடி செய்தவரை கண்டுபிடிக்கும் எழில், வருத்தத்தில் இருக்கும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பணம் மோசடி செய்தவரை கண்டுபிடிக்கும் எழில், வருத்தத்தில் இருக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் பண மோடி செய்தவன் யார் என கண்டுபிடித்துவிட்டான், ஆனால் அவன் இருக்கும் இடம் தெரியாமல் தேடி அலைகிறார். பின் இனியா அம்மாவிற்கு உதவி செய்ய வேண்டும் என கெஞ்சுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நாளை பணம் கொடுக்காமல் போனால் அனைவரும் சேர்ந்து போலீசில் புகார் அளிப்பார் என கோபி சத்தம் போடுகிறார். உடனே பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம் எழில் பணத்தை திருடியவன் யார் என கண்டுபிடிக்கிறார். நேற்று பார்த்தவனின் மச்சான் தான் பணத்தை எடுத்திருப்பான் என கண்டுபிடித்து, அவனை தேடி அலைகிறார். அமிர்தா அம்மா அப்பா எழில் எங்கே போனான் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

அமிர்தாவை மீண்டும் போன் செய்ய சொல்ல அவர் போன் செய்து பார்க்கிறார். ஆனால் அவர் எடுக்காமல் கட் செய்கிறார். உடனே அமிர்தா என்ன நடந்திருக்கும் என தெரியாமல் இருக்கிறார். பின் பாக்கியா காய் வாங்க செல்ல, சமையலுக்கு தேவையான காய் வாங்குனீங்க இன்னும் காசு தரவில்லை என கேட்கிறார். உடனே அக்கம் பக்கத்தினர், அவர் உங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் காசு கொடுக்கவில்லை என சொல்லி பாக்கியாவை அவமானப்படுத்துகிறார்.

எதிர் வீட்டில் குடி வரும் ஐஸ்வர்யா கண்ணன், அதிர்ச்சியில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அந்த பக்கம் கோபி வந்து பாக்கியா நடு ரோட்டில் அவமானப்படுவதை பார்க்கிறார். பின் எழில் பண மோசடி செய்தவனை பார்த்துவிட அவனை துரத்தி சென்று அடிக்கிறார். உடனே அவன் தப்பான அட்ரஸ் சொல்லி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான். எழில் துரத்தி சென்று பிடிக்க முடியாமல் இருக்கிறார். பின் பாக்கியாவின் நிலைமையை பார்த்து இனியா வருத்தப்பட்டு அழுகிறார். கோபியிடம் சென்று அம்மாவிற்கு உதவி செய்ய சொல்ல, அவர் அவங்க அவங்க பண்ணுவது எல்லாவற்றிற்கும் அனுபவிக்க வேண்டும் என சொல்கிறார்.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் கண்ணம்மா, தடுப்பாரா சௌந்தர்யா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

எழில் பாக்கியாவிற்கு போன் செய்து, கவலைப்படாமல் இருக்க சொல்ல உன்னையும் நான் கஷ்டப்படுத்துகிறேன் என சொல்லி பாக்கியா அழுகிறார். எல்லாரையும் நான் தான் கஷ்டப்படுத்துகிறேன். நாளைக்கு எல்லாரும் பணம் கேட்டு வருவார்கள் நான் என்ன சொல்வது என சொல்லி கதறி அழுகிறார். உடனே எழில் நான் பணத்தை கண்டுபிடித்துவிடுவேன் என சொல்ல, போனை வைத்த பின் எழில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என நினைத்து அழுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!