8 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பாராத கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்!
தமிழக மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த சீரியலின் 2ம் பாகம் சீக்கிரத்தில் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. புத்தம் புதிய கதைக்களத்துடன் துவங்கப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஆரம்ப எபிசோடுகள் முதல் இன்று வரையும், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் கதை ஓட்டத்தில் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்திருந்தாலும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவுக்கு பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்திப்பதாக புதிய எபிசோடுகள் வெளியானது. இதையடுத்து பாரதி மற்றும் கண்ணம்மாவின் 2 குழந்தைகளுடன், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் வகையில் புதிய கதைக்களம் தற்சமயம் வெளியாகி வருகிறது. இதிலும் பல கதை முடிச்சுகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், அடுத்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகம் என்ற பெயரில் பல புதிய ப்ரோமோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில், 8 ஆண்டுகளுக்கு பிறகு காட்டப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகத்திலும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்திருப்பதாகவும், கண்ணம்மாவுடன் சேர நினைக்கும் பாரதியை கடத்தி வைத்துக்கொண்டு வெண்பா மிரட்டுவது போலவும் அடுத்த கட்ட கதைக்களம் பயணிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.