புது பைக் வாங்கிய சந்தியா சரவணன், பார்வதிக்கு சப்ரைஸ் கொடுக்கும் பாஸ்கர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
புது பைக் வாங்கிய சந்தியா சரவணன், பார்வதிக்கு சப்ரைஸ் கொடுக்கும் பாஸ்கர் - இன்றைய
புது பைக் வாங்கிய சந்தியா சரவணன், பார்வதிக்கு சப்ரைஸ் கொடுக்கும் பாஸ்கர் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
புது பைக் வாங்கிய சந்தியா சரவணன், பார்வதிக்கு சப்ரைஸ் கொடுக்கும் பாஸ்கர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவும் சரவணனும் புதிதாக பைக் வாங்க கடைக்கு செல்கின்றனர். பின் பாஸ்கர் பார்வதிக்கு எதோ சர்ப்ரைஸ் இருக்கிறது என சொல்லி அழைத்து செல்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் புதிதாக பைக் வாங்க நினைத்த சரவணனை, சந்தியா பைக் ஷோரூம் அழைத்து செல்கிறார். அங்கே விலை அதிகமாக இருக்கும் போல என சரவணனன் சொல்கிறார். உள்ளே சென்றதும் சந்தியா இங்கிலீஷில் பேசி பைக்கை பார்க்கிறார். ஒரு பைக்கை காண்பித்து நன்றாக இருக்கிறதா என சந்தியா கேட்க இது என்ன பின்னால் சீட் பெரிதாக இருக்கிறது என சரவணன் சொல்கிறார். மேலும் ஸ்கூட்டர் வாங்கி கொள்கிறேன் என சரவணா சொல்ல, சந்தியா பைக் தான் வாங்க வேண்டும் என சொல்கிறார்.

பின் சந்தியா ஒரு வண்டியை காண்பித்து நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். சரவணன் பிடித்திருக்கிறது என சொல்ல, சந்தியா வண்டியை பற்றி விசாரிக்கிறார். உடனே சந்தியாவிற்கு எல்லாம் தெரிந்ததை பார்த்த சரவணன் ஆச்சர்யத்தில் இருக்கிறார். உடனே லோன் வாங்குவது பற்றி பேசி சந்தியா எல்லாம் முடித்துவிட சரவணன் சிவகாமிக்கு போன் செய்ய போகிறார். உடனே சந்தியா போனை வைக்க சொல்ல, என்னாச்சு என கேட்கிறார். காலையில் தான் சொல்லிடீங்க இப்போ நாம சர்ப்ரைஸா போவோம் என சொல்ல, சரவணன் வண்டியை எடுக்க என் தம்பி வருவான் என சொல்கிறார்.

பணம் மோசடி செய்தவரை கண்டுபிடிக்கும் எழில், வருத்தத்தில் இருக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

உடனே சந்தியா அதெல்லாம் வேண்டாம் நீங்க தேவையான எல்லாம் செய்ங்க என அனுப்ப, சரவணன் எனக்கு வண்டி ஓட்ட தெரியாது என சொல்கிறார். பின் அர்ச்சனா செந்தில் கடையில் இருக்க, அர்ச்சனா நாமளும் வண்டி வாங்கலாம் என சொல்கிறார். ஏன் அம்மாவிடம் மாட்டுவதற்கா என கேட்க, வீட்டு செலவிற்கு பணம் இல்லை ஆனால் வண்டி வாங்க பணம் இருக்கிறதா என கேட்பார், உடனே அர்ச்சனா எங்க வீட்டில் வாங்கி கொடுத்தார்கள் என சொல்லுவோம் என சொல்கிறார். மறுபக்கம் பார்வதி பாஸ்கரை பார்க்க காத்திருக்கிறார். பாஸ்கர் வந்ததும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என சொல்லி வண்டியில் எற சொல்கிறார். இது விக்கியின் பிளான் ஆக இருக்குமா என நினைத்து பார்வதி பாஸ்கருடன் செல்கிறார்.

உடனே சந்தியா கொஞ்ச நேரம் காத்திருங்க என சொல்லிவிட்டு சென்று சுடிதார் மாட்டி வருகிறார். சரவணன் அவரை பார்த்து என்ன திடீரென இப்படி வந்து நிற்கிறீங்க என கேட்க வண்டி ரெடியாக இருக்கிறது என வந்து சொல்கின்றனர். உடனே சந்தியா சாவியை சரவணனிடம் கொடுக்க சொல்கிறார். பின் வண்டியை ஸ்டார்ட் செய்து பின்னால் உட்கார சொல்கிறார். சரவணன் நீங்க தான் ஓட்ட போறிங்களா என கேட்க வண்டியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். அப்போது சரவணன் எதுவும் பேசாமல் இருக்க, சந்தியா என்ன அமைதியாக வரீங்க என கேட்கிறார்.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் கண்ணம்மா, தடுப்பாரா சௌந்தர்யா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இன்னும் உங்களை பற்றி நான் சரியாக தெரிந்துக் கொள்ளவில்லை போல என சரவணன் சொல்ல, எப்ப வண்டி ஓட்ட கற்றுக் கொண்டீர்கள் என சரவணன் கேட்கிறார். சின்ன வயசுல இருந்தே என் அப்பா ஓட்ட கற்றுக் கொடுத்துவிட்டார் என சந்தியா சொல்ல, நான் லைசன்ஸ் கூட வைத்திருக்கேன் என சொல்கிறார். உடனே சரவணனிடம் நீங்க ஏன் இன்னும் வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை என கேட்க, அப்படியே இருந்துவிட்டேன் என சொல்கிறார். பின் சரவணனும் சந்தியா பின்னால் அமர்ந்து வர அங்கே சிவகாமி நிற்கிறார். உடனே சந்தியா வண்டியை திருப்ப சரவணன் ஏறுவதற்குள் சென்றுவிட்டார். உடனே சரவணன் பின்னால் ஓடி சென்று வண்டியில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!