‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வியின் முதல் வீடியோ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் தாமரை செல்வி ரசிகர்கள் தனக்கு கொடுத்து வந்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி கூறி முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக் பாஸ் தாமரை
மக்களின் பேராதரவுடன் 97வது நாளுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. இம்முறையும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை போட்டியாளர் உட்பட 18 பேர் இடம்பிடித்திருந்தனர். ஆரம்பம் முதலே கலகலப்பும், கைகலப்புமாக நகர்ந்து வந்த இந்த சீசன் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. தொடர்ந்து நிகழ்ச்சியின் பார்மேட் படி, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள், எலிமினேஷன் என நகர்ந்து வந்த இந்த சீசன் தற்போது முடிவு கட்டத்தை எட்டி உள்ளது.
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
இப்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, நிரூப், பாவனி, அமீர், தாமரை செல்வி என 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் அமீர், நிரூப், ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் ஃபினாலேக்கு சென்றுள்ள நிலையில் பாவனி மற்றும் தாமரை செல்வி இருவரும் டேஞ்சர் ஜோனில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது இந்த இருவரில் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறியது தாமரை செல்வி என உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஜன.10க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவத்துறை முக்கிய ஆலோசனை!
அந்த வகையில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடைசி வார எலிமினேஷனாக தாமரை செல்வி வெளியற்றப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறி ஒரு முக்கிய வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ‘நான் கலைத்துறையில் 22 வருடமாக இருந்து வருகிறேன். எனக்கு விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த போது ஆதரவும், அன்பும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி மேலும் எனக்கு உங்களது ஆதரவு அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.