பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

0
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

கொரோனா, ஓமிக்ரான் பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் வருகிற பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை:

இந்தியாவில் கொரோனா மற்றும் அதிலிருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று தற்போது வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 15, 2022 வரை மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு ஜனவரி 8 ஆம் தேதி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செயல்பாடுகளை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜன.10க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவத்துறை முக்கிய ஆலோசனை!

வழிகாட்டுதல்களின்படி, பள்ளிக் கல்வித் துறை, திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை மற்றும் பிற துறைகள் அனுமதித்தபடி ஆசிரியர்கள் தங்கள் நிர்வாகச் செயல்பாடுகளைச் தொடர வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போட்டித் தேர்வுகள் கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும். தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளும் GOI வழிகாட்டுதல்களின்படி இருக்கும்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, மாநிலத்தில் நடைபெறும் பெரிய கூட்டங்கள் தடை செய்யப்பட்டன, அழகு நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டன. தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். புதிய விதிகளின்படி, திரையரங்குகள் 50 சதவீத திறனுடன் செயல்பட வேண்டும், இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!