தமிழகத்தில் ஜன.10க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவத்துறை முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை சற்று கட்டுக்குள் வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 3வது அலை தொடங்கி விட்டதாக மருத்துவத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்தினர். எனவே இதில் இருந்து மக்களை காக்கும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தினசரி இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலுக்கு
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!
இந்நிலையில் 15-18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி உடையோர் விரைந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என தொழில் துறையினர் கோரி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் அரசு அறிவித்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. மேலும் வரும் வாரத்தில் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. எனவே ஜனவரி 10க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்து நாளை சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.