மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது கா்நாடகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலப்படுத்தபடுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்
முழு ஊரடங்கு அமல்?
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்தியாவில் உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடக, ஹரியானா,டெல்லி, மணிப்பூர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மசோதா குறித்த முழு விபரம்!
இந்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமலப்படுத்தபடுமா? என்று கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியதாவது, பொதுமக்களின் நலன் கருதி முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அதிகாரிகள் நடவடிக்கை!
அத்துடன் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். இதனால் தங்களை பாதுகாப்பது மட்டுமின்றி தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.