தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அதிகாரிகள் நடவடிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் தொகுப்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்டோ, பேருந்துகள், ரயில்கள் ஓடாது – முழு ஊரடங்கு எதிரொலி! அரசு அதிரடி!
இந்த பரிசு தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த 21 வகையான பொருட்கள் ஒரு மஞ்சப்பையில் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் தொகுப்பு அனுப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் சில பொருட்களை கடை ஊழியர்கள் எடுத்து வைத்து கொண்டு அதன் பின் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது.
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் – தலைமை ஆணையர் அறிவிப்பு!
மேலும் இதற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்களின் பெயர், எண்ணிக்கை, எடை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பொங்கல் தொகுப்பில் ஒட்டி வைக்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு ஒட்டப்பட்டு இருப்பதை மாவட்ட வழங்கல், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், துணை, சார்பதிவாளர் உள்ளிடோர் உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உணவு துறை ஆணையிட்டுள்ளது. பட்டியல் ஒட்டப்படாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.