திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு - தேவஸ்தானம் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு - தேவஸ்தானம் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்ட பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

நவம்பர் மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தற்போது 50,000 பக்தர்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஆந்திராவில் பெய்த அதிக கனமழையால் திருமலை பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது கோயில் வளாகம் மழை நீரில் சூழ்ந்துள்ளது. அதனால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது. பிறகு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை நின்றவுடன் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்கள் 6 மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்டோ, பேருந்துகள், ரயில்கள் ஓடாது – முழு ஊரடங்கு எதிரொலி! அரசு அதிரடி!

இந்த நிலையில் வருகிற 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.அதனால் நவம்பர் மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவே வேறு தேதிகளில் திருப்பதிதரிசனம் செய்ய வரலாம் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!